365பா
இந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:Disclaimer
The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.RSS Links
’பா’த் தேடல்
-
Join 313 other subscribers
என் மற்ற வலைப்பதிவுகள்
Archives
- July 2020 (1)
- March 2015 (1)
- February 2015 (1)
- December 2014 (2)
- November 2014 (1)
- October 2013 (1)
- July 2012 (6)
- June 2012 (30)
- May 2012 (31)
- April 2012 (29)
- March 2012 (33)
- February 2012 (30)
- January 2012 (31)
- December 2011 (32)
- November 2011 (30)
- October 2011 (30)
- September 2011 (32)
- August 2011 (32)
- July 2011 (28)
Blog Stats
- 441,665 hits
Monthly Archives: December 2011
இன்னம் உறங்குதியோ?
எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ? ’சில்’ என்று அழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன், வல்லை, உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும், வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக; ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை; எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள் வல் ஆனை கொன்றானை, மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாடு, … Continue reading
Posted in ஆண்டாள், திருப்பாவை, நாடகம், பாவைப் பாட்டு, பெண்மொழி
3 Comments
மெல்ல நடந்தாள்
மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத, வான் கருப்பு வில்லி கணை தெரிந்து மெய் காப்ப, முல்லை மலர் மென் மாலைத் தோள் அசைய மெல்ல நடந்ததே புன் மாலை அந்திப் பொழுது நூல்: நளவெண்பா பாடியவர்: புகழேந்தி சூழல்: நளன்மீது காதல்வயப்படுகிறாள் தமயந்தி, அப்போது நிகழும் ஒரு மாலை நேரக் காட்சி (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் … Continue reading
Posted in இயற்கை, கதை கேளு கதை கேளு, சினிமா, நளவெண்பா, மாலை, வர்ணனை, வெண்பா
7 Comments
அவளோடு வாழ்க!
வெண் தலைக் குருகின் மென் பறை விளிக்குரல் நீள் வயல் நண்ணி இமிழும் ஊர! எம் இவண் நல்குதல் அரிது, நும் மனை மடந்தையொடு தலைப் பெய்தீமே! நூல்: ஐங்குறுநூறு (#86) பாடியவர்: ஓரம்போகியார் சூழல்: மருதத் திணை. சொந்த மனைவியை மறந்து இன்னொருத்தியுடன் வாழ்கிறான் ஒருவன். இந்தச் சூழ்நிலையில் ஒருநாள் அவன் தன்னுடைய மகனை … Continue reading
Posted in ஊடல், ஐங்குறுநூறு, பரத்தை, பெண்மொழி, மருதம்
7 Comments
உவமையில் பலவகை
கார்மணல் ஓட்டமும், பாசிக் கொத்தும், மேகமும், இருளும், விரிமலர்ச் சோலையும், வண்டுக் கூட்டமும், மற்று ஓர் விதப் பனை காய்த்து உள கொத்தும் கரும் குழலுக்கு இணை; அது பின்உறில் கொன்றைக் காய் எனப் பிறங்கும், அவிழ்ப்பு உறில் அகத்திக் காய்க் கொத்து அனையதாம் நூல்: அறுவகை இலக்கணம் பாடியவர்: தவத்திரு தண்டபாணி சுவாமிகள் பெண்களின் … Continue reading
Posted in இலக்கணம், உவமை நயம், பட்டியல்
11 Comments
செருக்கு
பிறர் தன்னைப் பேணும்கால் நாணலும், பேணார் திறன் வேறு கூறில் பொறையும், அறவினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும் இம்மூன்றும் ஊர் ஆண்மை என்னும் செருக்கு நூல்: திரிகடுகம் (#7) பாடியவர்: நல்லாதனார் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) 1. மற்றவர்கள் தங்களை அளவுக்கு மீறிப் புகழும்போது, … Continue reading
Posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா
3 Comments
மாலை தா!
ஆழி இழைப்பப் பகல் போம், இரவு வரின், தோழி துணையாத் துயர் தீரும்; வாழி நறு மாலை தாராய், திரையவோ என்னும் சிறு மாலை சென்று அடையும் போழ்து நூல்: யாப்பருங்கலக் காரிகை பாடியவர்: அமுதசாகரர் சூழல்: காதல் கொண்ட ஒருத்தி. துணையைப் பிரிந்து அவள் படுகிற வேதனையைக் கண்ட செவிலித் தாய்க்கு ஆதங்கம். அந்தக் … Continue reading
Posted in அகம், காதல், பிரிவு, பெண்மொழி, யாப்பருங்கலக் காரிகை, வெண்பா
7 Comments
முத்து இட்டல்
நகை செய் தன்மையின் நம்பு இழீஇத் தாய், துகள் பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற, முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும், குகை செய் இன்பு எழக் கோலம் இட்டு ஒத்ததே நூல்: தேம்பாவணி பாடியவர்: வீரமாமுனிவர் சூழல்: இயேசு பிறந்ததும் அன்னை மரியாள் அவரை அள்ளி எடுத்து முத்தமிடும் காட்சி … Continue reading
Posted in இயேசு, நண்பர் விருப்பம், பக்தி, பண்டிகை, பிள்ளைத்தமிழ், வீரமாமுனிவர்
6 Comments
சிரஞ்சீவி
ஒன்றும் அசைவில்லாமல் ….உடம்பையும் மறந்தோம், கொன்ற உயிர்களை நீ ….கொடுக்கவே, சிறந்தோம், அன்று தசரதன் பெற்று ….ஆர் உயிர் இறந்தோம், இன்று உனது வயிற்றில் ….இருவரும் பிறந்தோம் * விழிபோலும் என் தம்பி ….மெய் உயிர் போயே, முழுகாதபடி காத்தாய் ….முழுதும் காப்பாயே, பழிகாரன் முன் இந்தப் ….பயம் தீர்த்தாயே, அழியாத சிரஞ்சீவி ….யாய் இருப்பாயே! … Continue reading
Posted in அனுமன், கதை கேளு கதை கேளு, நாடகம், பக்தி, ராமன்
5 Comments
கப்பல் செல்லும் பாதை
திரைத்த விரிக்கின் திரைப்பின் நாவாய்போல் உரைத்த உரை அதனைக் கேட்டும் … உரைத்த பயன் தவா செய்வார் சிலர், ஏதம் நெஞ்சத்து இயன்ற அவா செய்வார் பலர் நூல்: இன்னிலை (#5) பாடியவர்: பொய்கையார் UPDATE: கீழே நண்பர்கள் @kryes மற்றும் @elavasam எழுதியுள்ள அருமையான விளக்கங்களைப் பார்க்கவும், அவற்றின் அடிப்படையில் நான் தவறாக எழுதிய … Continue reading
Posted in அறிவுரை, இன்னிலை, வெண்பா
11 Comments
கெட்டது பயம்!
ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடை மணி சேர் திருவரை கிண்கிணி அசைபட, திடுக்கிட்டு அரக்கர் வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே! நூல்: கந்தர் அலங்காரம் (#14) பாடியவர்: அருணகிரிநாதர் சூழல்: முருகனைக் குழந்தையாகக் கருதிப் பாடியது (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, … Continue reading
Posted in அருணகிரிநாதர், பக்தி, பிள்ளைத்தமிழ், முருகன்
8 Comments