கடி என் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்தேற்றுஆ ஈரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே
நூல்: தொல்காப்பியம் (#866, உரியியல்)
பாடியவர்: தொல்காப்பியர்
சூழல்: ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கக்கூடும் என்று ஓர் உதாரணத்துடன் விளக்குகிறது இந்தப் பாடல்
’கடி’ என்ற சொல்லுக்குப் பத்து பொருள்கள் உண்டு. அவை:
- நீக்குதல்
- கூர்மை
- காவல்
- புதுமை
- வேகம்
- விளக்கம்
- அதிகம்
- சிறப்பு
- அச்சம்
- சபதம் செய்தல் / சூள் உரைத்தல்
070/365
ஒரு பொருள் பன் மொழி தெரியும்!
இது என்ன பல்பொருள் ஒரு மொழியா?:)
எடுத்துக் காட்டெல்லாம் ஆரு குடுக்குறதாம்? 🙂
நீக்குதல் = கடி தாழ் (தாழ்ப்பாள்)
கூர்மை = கடி வேல்
காவல் = கடி நகர்
புதுமை = கடி கருவி
வேகம் = கடி காற்று
விளக்கம் = கடி நூல்
அதிகம் = கடி மழை
சிறப்பு = கடி அரண்
அச்சம் = கடி இருள்
சபதம் செய்தல் / சூள் உரைத்தல் = கடி போர்
* “பல் குணம் தழுவிய ஓர் உரிச் சொல்”-ன்னு சொல்லுவாய்ங்க!
ஒரே உரிச்சொல்லான கடி = பல குணங்களைக் குறிக்குது!
* அதே போல் “ஒரு குணம் தழுவிய பல் உரிச் சொல்”…
சால, உறு, தவ, நனி, கூர், கழி
= பல உரிச் சொற்கள்…ஒரே குணமான ‘மிகுதி’-யைக் குறிக்கிறது!
தமிழ் மொழி ரொம்ப அழகா இருக்கு-ல்ல?
எங்கோ படித்தது:
ஆங்கிலத்தில் house என்ற வார்த்தைக்குத்தான் அதிகமான அர்த்தங்கள் உண்டாம். மொத்தம் ஐம்பது அர்த்தங்கள்.
தமிழில் அரி என்ற ஒற்றை வார்த்தைக்கு நூற்றைம்பது அர்த்தங்கள் உண்டாம்.
அர்த்த உதாரணங்களை கேயாரெஸ் தந்து உதவுவார் 🙂
me the escape-u!:)
பொருள் காட்டுகளைச் சொக்கநாதரே காட்டுவார்! அவர் கிட்ட தான் மதுரையின் சாவிக் கொத்து இருக்கு!:)
நல்ல செய்யுள். இந்தச் செய்யுளைப் படிக்கையில் கடிமலர், கடிகமழ், கடிதேகி, கடிநிழல், கடிகால் போன்ற பயன்பாடுகளும் நினைவுக்கு வருகின்றன.