சொல் ஒன்று, பொருள் பத்து!

கடி என் கிளவி

வரைவே கூர்மை காப்பே புதுமை

விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே

அச்சம் முன்தேற்றுஆ ஈரைந்தும்

மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே

நூல்: தொல்காப்பியம் (#866, உரியியல்)

பாடியவர்: தொல்காப்பியர்

சூழல்: ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கக்கூடும் என்று ஓர் உதாரணத்துடன் விளக்குகிறது இந்தப் பாடல்

’கடி’ என்ற சொல்லுக்குப் பத்து பொருள்கள் உண்டு. அவை:

  • நீக்குதல்
  • கூர்மை
  • காவல்
  • புதுமை
  • வேகம்
  • விளக்கம்
  • அதிகம்
  • சிறப்பு
  • அச்சம்
  • சபதம் செய்தல் / சூள் உரைத்தல்
070/365
This entry was posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

5 Responses to சொல் ஒன்று, பொருள் பத்து!

  1. ஒரு பொருள் பன் மொழி தெரியும்!
    இது என்ன பல்பொருள் ஒரு மொழியா?:)

  2. எடுத்துக் காட்டெல்லாம் ஆரு குடுக்குறதாம்? 🙂

    நீக்குதல் = கடி தாழ் (தாழ்ப்பாள்)
    கூர்மை = கடி வேல்
    காவல் = கடி நகர்
    புதுமை = கடி கருவி
    வேகம் = கடி காற்று

    விளக்கம் = கடி நூல்
    அதிகம் = கடி மழை
    சிறப்பு = கடி அரண்
    அச்சம் = கடி இருள்
    சபதம் செய்தல் / சூள் உரைத்தல் = கடி போர்

    * “பல் குணம் தழுவிய ஓர் உரிச் சொல்”-ன்னு சொல்லுவாய்ங்க!
    ஒரே உரிச்சொல்லான கடி = பல குணங்களைக் குறிக்குது!

    * அதே போல் “ஒரு குணம் தழுவிய பல் உரிச் சொல்”…
    சால, உறு, தவ, நனி, கூர், கழி
    = பல உரிச் சொற்கள்…ஒரே குணமான ‘மிகுதி’-யைக் குறிக்கிறது!

    தமிழ் மொழி ரொம்ப அழகா இருக்கு-ல்ல?

  3. எங்கோ படித்தது:
    ஆங்கிலத்தில் house என்ற வார்த்தைக்குத்தான் அதிகமான அர்த்தங்கள் உண்டாம். மொத்தம் ஐம்பது அர்த்தங்கள்.

    தமிழில் அரி என்ற ஒற்றை வார்த்தைக்கு நூற்றைம்பது அர்த்தங்கள் உண்டாம்.

    அர்த்த உதாரணங்களை கேயாரெஸ் தந்து உதவுவார் 🙂

    • me the escape-u!:)
      பொருள் காட்டுகளைச் சொக்கநாதரே காட்டுவார்! அவர் கிட்ட தான் மதுரையின் சாவிக் கொத்து இருக்கு!:)

  4. G.Ragavan says:

    நல்ல செய்யுள். இந்தச் செய்யுளைப் படிக்கையில் கடிமலர், கடிகமழ், கடிதேகி, கடிநிழல், கடிகால் போன்ற பயன்பாடுகளும் நினைவுக்கு வருகின்றன.

Leave a comment