நையுறு சிந்தையள், நயனம் வாரியின்
தொய்யல் வெம் சுழி இடைச் சுழிக்கும் மேனியள்,
‘ஐய, நீ அளப்ப அரும் அளக்கர் நீந்தினை,
எய்தியது எப்பரிசு? இயம்புவாய்!’ என்றாள்.
*
’சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்கு உடை உணர்வினார் ஓய்வு இல் மாயையின்
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங்கடல் கடந்தன் என் காலினால்’ என்றான்
நூல்: கம்ப ராமாயணம் (சுந்தர காண்டம், உருக்காட்டுப் படலம், பாடல்கள் #96 & #97)
பாடியவர்: கம்பர்
சூழல்: அசோக வனத்தில் அனுமன் சீதையைச் சந்திக்கிறான். அப்போது அவள் அவனிடம் கேட்கும் ஒரு கேள்வியும் அதற்கு அனுமனின் பதிலும்
சீதை உருகுகின்ற மனத்தை உடையவள். அவளுடைய விழிகளில் இருந்து வழிகின்ற கண்ணீர் கீழே விழுந்து சேறு கலந்த குளமாக, அதில் ஏற்படும் சீர்ச்சுழியில் சிக்கிச் சுழல்கிறது சீதையின் தேகம்.
அப்படிப்பட்ட சீதை, அனுமனை வியப்புடன், பிரமிப்புடன் பார்த்தாள். ’ஐயனே, யாராலும் அள்ளமுடியாத பெரும் கடலைத் தாண்டி நீ இங்கே வந்து சேர்ந்திருக்கிறாய். அது எப்படி? சொல்’ என்றாள்.
*
அனுமன் சொன்னான்:
‘சின்னஞ்சிறு இடையைக் கொண்ட அன்னையே,
உன்னுடைய கணவன், அந்த ராமனின் திருவடிகளைச் சிந்தித்த ஞானிகள், முடிவில்லாத, மாயை என்கிற பெரிய கடலையே தாண்டிச் சென்றுவிடுகிறார்கள். அதோடு ஒப்பிடும்போது இந்தக் கருங்கடல் எம்மாத்திரம்?
அவனை வணங்கினேன், அவன் அருளால், என் கால்களால் கடலைச் சாதாரணமாகத் தாண்டிவந்தேன், அவ்வளவே!
துக்கடா
- #365paa முதல் ஈடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை தொடர்ந்து வாசித்தவர்கள், விமர்சித்தவர்கள், விவாதித்தவர்கள், தொலைபேசியில், ஈமெயிலில், நேரில் என்று கருத்துச் சொன்னவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
- இதுகுறித்து நண்பர் ரவிசங்கர் தயாரித்திருக்கும் ஒரு புதிர்ப் போட்டி, புதுமையான பரிசுகளுடன் : http://madhavipanthal.blogspot.in/2012/07/365paaq.html
- ஒரு வருடம்முழுவதும் தினம் ஒரு பாடலைப் பிரசுரிப்பது பெரிய விஷயமே அல்ல, அதற்காக நான் வாசிக்க முடிந்த நூல்கள் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்புடன் ஒப்பிடும்போது இது ஒரு சாதாரண மேட்டர். குறிப்பாக, கம்ப ராமாயணத்தின் உயர்வை இந்தத் தொடருக்காக ஆங்காங்கே அதனைப் புரட்டியபோதுதான் புரிந்துகொண்டேன். அதனை முழுக்கப் படிக்கும் முயற்சியில் இருக்கிறேன், உணர்ந்து படிப்பது இன்னொருகாலம், அதற்கும் இறைவன் ஒரு வழி செய்வான்
- இன்ஷா அல்லா, இன்னொரு சீஸனில் சந்திப்போம்!
365/365
வாழ்த்துகள். போகிற போக்கில் ஒரு பெரிய சேவை.
நன்றி சுரேஷ்
நன்றி சொக்கன்.
இந்த தொடரின் மூலம் நான் கற்றது நிறைய. ஏதோ புரியாத மொழியில் எழுத்தப்பட்டது போன்று இருந்த சங்கப்பாடல்களை மனதுக்கு அருகில் கொண்டு வந்து சேர்த்ததுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
நன்றி செந்தில்
A fitting ending Mr.Chokkan! You have crossed the passage of 365 days successfully with dedicated effort on your part! Congratulations 🙂
amas32
நன்றி மேடம்
என் இனிய 365பாவிற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
முருகார்ந்த வாழ்த்துக்கள்!
—————————
அரும் பெறல் மரபின், பெரும் பெயர்த் தொண்டு! = தமிழ்த் தொண்டு!
365th day of 365பா!
இந்தத் தமிழ் முயற்சிக்குப் “பல்லாண்டு பல்லாண்டு”!!
நன்றி கேஆரெஸ்
இது = தினம் ஒரு பா மட்டுமல்ல!
இது = தினம் ஒரு உணவு…. பல தமிழ் ஆர்வலர்களுக்கு!
ஒவ்வொரு நாளும்…..
* ஒவ்வொரு தமிழ்ப் பாவைப் பற்றிப் பேசி,
* அதிலுள்ள இலக்கிய/ இலக்கண இன்பங்களை நுகர்ந்து,
* தமிழ் வரலாற்றிலே தோய்ந்து,
* கவிஞர்/ எழுத்தாளரைப் பற்றி மேலும் அறிந்து,
* இன்னும் பல…
மிக முக்கியமாக, தமிழைக் = கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
* தள ஆசிரியர் = நண்பர் என். சொக்கனுக்கு மனமார்ந்த “வாழ்த்துகள்”!
* தமிழ்த் தும்பிகளான = @RagavanG, @amas32, @nvaanathi, சிவ-ஆனந்தன், பழ.கந்தசாமி, @balaramanL, @mayilSK, @to_pvr, சமுத்ரா, Sree Guruparan….. இன்னும் வாசிக்கும் -சு வாசிக்கும் பலப்பலருக்கும் வாழ்த்துக்கள்!
தினம் ஒரு பா ,அதன் விளக்கம் மற்றும் துக்கடா .சிறந்த முயற்சி. அருமையான பதிவுகள்.நண்பர் என். சொக்கனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி சார்
நன்றி சொக்கன்..பின்னூட்டம் இடவில்லை எனினும்..ஒரு அமைதியான ஆர்வம் கொண்ட வாசகனாகப் படித்திருந்தேன்..இன்னும் எழுதலாம் நீங்கள்..இனி உங்களிடமிருந்து தினம் ஒரு பா மின்னஞசல் வராது என நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது.. நன்ரிகள் பல.. அன்புடன் சின்னக் கண்ணன்
அட, நீங்கள் படித்துக்கொண்டிருந்தீர்களா? தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிரத்தையோடு எழுதியிருப்பேனே 🙂 நன்றி கண்ணன் 🙂
அறிமுகமான நாளில் இருந்து தினமும் படிக்கும் வலைப்பூ இது. இதனால் அறிமுகமான அருமையான பாடல்கள் அனேகம். பலமுறை நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன். சொக்கனுக்கும், பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள். அருமையான முயற்சி.
நன்றிங்க
ஆண்டு நிறைவுக்கு – நிறைவான பா!
கம்பனின் பா!
அனுமனின் பா! = தொண்டும் பணிவும்!
————————-
“என்றாள்” – என்று பெண்ணில் தொடங்கி
“என்றான்” – என்று ஆணில் முடியும் அழகு!
————————-
பாட்டை நேரா வாசிங்க!
ஐய, நீ அளப்ப அரும் அளக்கர் நீந்தினை,
எய்தியது எப்பரிசு? இயம்புவாய்!’ – என்றாள்.
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங்கடல் கடந்தன் என் காலினால்’ – என்றான்
//உன் ஒரு துணைவன் தூய தாள்//
அதென்ன “ஒரு” துணைவன்?
சீதைக்கு ஒரு துணைவன் = ஒரே துணைவன் தானேய்யா!:)
கம்பர், மகாபாரதம் படிக்கும் போது, Confuse ஆகிட்டாரா?:))
——————-
ஒருவர் தனிமையில் வாடும் போது பார்த்து இருக்கீங்களா?
= யார் துணை?
= அம்மா, அப்பா, தங்கை, தங்கை பிள்ளைகள், நண்பர்கள் ன்னு பலரும் இருப்பாங்க, ஆறுதலுக்கு!
= ஆனா “துணை”?
—————-
அதே போல், சீதைக்கு உதவியா திரிசடை என்ற ஒரே தோழி, அந்த வனத்தில் கிடைத்தாள்!
மத்தபடி மரம், அணில், பறவை = இதெல்லாம் தான் துணை!
ஆனா, எப்படி, அரண்மனைச் சாப்பாடு சாப்பிடாம, பத்து மாசம் பட்டினியாவோ, இல்லை வனத்தின் காய்-கனி உண்டோ வாழ முடிந்தது?
—————-
முருகன் துணை ன்னு எழுதி கல்யாணத்தை ஆரம்பிக்கறாங்க!
இவங்க பக்கத்துல, முருகன் நின்னுக்கிட்டு, Shoppingல, ஒவ்வொரு புடைவையா எடுத்துக் கொடுக்கறானா?:))
* திருமண வேலைகள் பல ஓடினாலும்….. அந்த ஓட்டத்தின் ஊடே, அந்த “முருக எண்ணமே துணை”
* இரவு படுக்கும் போது, “அப்பாடா” என்று சாயும் போது…. மனசுக்கு = முருகன் துணை!
—————
அதே போல்….
துணை = ஒருவன் தான்!
துணை = மனசுக்குத் தான்!
அவன் இல்லீன்னாலும், அவன் எண்ணமே துணை!
அதான், உன் “ஒரு” துணைவன் என்கிறான் அனுமன்!
சொல் அப்படி வந்து விழுகிறது! = உண்மையின் சொல் அப்படித் தான் மனத்தில் வந்து விழும்!
சொல்லின் செல்வன் அல்லவா!
அருமையான சேவை. வணக்கங்கள்!!
நான் ட்விட்டரில் சொக்கனை தொடரும்போது வராத மதிப்பு, அவருடைய புத்தக அணிவகுப்பை காணும்போது வராத மதிப்பு, இந்த 365பாவினால் ஒவ்வொரு நாளும் வ(ளர்)ந்தது. //ஒரு வருடம்முழுவதும் தினம் ஒரு பாடலைப் பிரசுரிப்பது பெரிய விஷயமே அல்ல// என அவர் சொல்வது, காரணம் எதுவாயினும், இன்னும் பிரமிக்கத்தான் வைக்கிறது.
@kryes, @RagavanG அவர்களுக்கும் நன்றிகள். தங்களது விளக்கங்களால் வெவ்வேறு தளங்களுக்கு எடுத்துச்சென்றீர்.
ஆ.வில வந்த சில தொடர்களை மிகவும் ரசித்ததுண்டு (க.பெ, துணையெழுத்து, தீதும் நன்றும்..). இந்த வாரத்தோட தொடர் முடிஞ்சிடுமோங்குற பயத்துல, கடைசீல இருக்கும் ‘தொடரும்/வளரும்’ இருக்கான்னு பாத்துட்டு படிப்பது என் ஃபோபியா, இன்று இங்கும் வந்தவுடன் துக்கடாதான் முதலில் படித்தேன். முதல் ஈடு முற்றும், அடுத்ததைப்பற்றிய அறிவிப்பேதுமில்லை! 😦
ஒரு தேர்ந்த சுயநலவாதியாய், இதை தொடரும் வாய்ப்புகளை ஆராயும்படி வேண்டிக்கொள்கிறேன்.
நன்றிங்க. இன்னொரு சந்தர்ப்பத்தில் வேறொரு வடிவத்தில் இதைத் தொடர்வோம்
மிகச் சிறந்த பணி, வாழ்க வளர்க
நன்றி!
//கருங்கடல் கடந்தனென் காலினால்//
கடலைக் கப்பல்-ல்ல கடக்கலாம்! காலினால் எப்படிக் கடக்க முடியும்?:)
இயேசுநாதப் பெருமான் நீர் மேல் நடந்ததாக விவிலியம் பேசும்!
ஆனால், அனுமன் அப்படி நடந்ததாக, இராமாயணத்தில் வருகிறதா என்ன? எனக்குத் தெரிஞ்சி இல்லை! இருந்தால், அன்பர்கள் அறியத் தாருங்கள் – திருத்திக் கொள்கிறேன்!
——————-
அப்ப, “கடந்தனென் காலினால்” ன்னா என்ன பொருள்?
கால் = காற்று!
காற்றில் கடந்து வந்தேன்-ன்னு சொல்றான் அனுமன்;
அவனே காற்றின் மைந்தன் தானே!
கால் = பாதை என்றும் பொருள் கொள்ளலாம்!
இராகவன் காட்டிய நல்வழி = பாதையைப் பற்றிக் கொண்டேன்! அதனால் கடந்து வந்தேன் ன்னு சொல்வதும் அழகே!:)
கால் என்பது அழகிய தமிழ்ச் சொல்!
இதை ஒட்டிப் பல காரணப் பெயர்கள்!
* கால் = உடம்பிலே கால் பாகம் இருப்பதால். கால் (தொடை இல்லாமல், கீழே)
* காலம் = கால் + அம் (அம் =சாரியை)
Time = Measurement between 2 point of events
கால் தானே இரண்டு அடிகளை எடுத்து வைக்கிறது? ஒரு கணத்தில் இருந்து இன்னொரு கணத்திற்கு! அதனால் கால் + அம் = காலம்!
* காற்று = கால் + து (து=சாரியை)
கால் போல் ஓடிக் கொண்டே இருப்பதால் = காற்று!
சிறு “கால்” அரும்ப, தீ அரும்பும் ன்னு குமரகுருபரர் பாடுவாரு! சிறு கால் = தென்றல்!
* எழுத்துக்களுக்கு “கால்” வாங்குவதும் இப்படியே!
க! இன்னொரு காலை எடுத்து வச்சி நீட்டினா = கா
பக்கத்துல போடுறோமே = ா ; கால் வாங்குதல் 🙂
சீதை, ” நீ அளப்ப அரும் அளக்கர் நீந்தினை?” ன்னு கேக்குறா! (அளக்கர் = கடல்)
நீந்தி வந்தான் -ன்னு நினைச்சிக்கிட்டா போல!:)
அனுமன், “கருங்கடல் கடந்தனென் காலினால்” ன்னு செம சுவையாப் பதில் சொல்லுறான்-ல்ல?:))
——————-
அனுமன் இந்தக் கடலைக் கடந்தது,
என் காலால் அல்ல, அவன் காலால் ன்னு சொல்வதாகவும் கொள்ளலாம்!
“கால்” = இறைவன் திருவடி!
பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடி சேராதார்
பிறவி = கடல்
இறைவன் அடி் (“கால்”) = கப்பல்!
வள்ளுவர் பிறவியை=கடல் ன்னு வெளிப்படையா உருவகித்து, இறைவன் காலை=கப்பல் ன்னு வெளிப்படையா உருவகிக்கலை!
என்ன அணி-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?:))
திரு. சொக்கன்,
மிகப்பெரும் சேவைக்கு நன்றி.
‘தினம் ஒரு பா’ ஆண்டின் 365-நாளும் வருவது என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். 365-நாட்களோடு முடிவது என்று நான் எண்ணவே இல்லை.
அடுத்த சீசன் நாளையே ஆரம்பிக்கும் என்று தயவுசெய்து சொல்லுங்கள்.
நன்றி. ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொள்கிறேன். அதன்பின் வேறொரு வடிவத்தில் தொடர்வோம்
சொக்கன் அண்ணே – இது உங்கள் இலக்கிய சேவையில் இன்னுமோர் நல்லதோர் ஒன்ஸ்மோர்-வேண்டும் சேவை. உங்கள் விகி பக்கத்தில் இதனையும் அவசியம் சேர்ப்பீர். “தினம் ஒரு …” – சீக்குவெலில் அடுத்தது என்ன?
கண்ணபிரான் அண்ணனின் கருத்துக்களையும், விளக்கங்களையும் இந்த நேரம் அவசியம் குறிப்பிட வேண்டும். சுவாரஸ்யம் இருந்திருக்காது அவறன்றி. எனவே அவருக்கு(ம்) மிக்கநன்றி. 🙂
நன்றி. தினம் ஒரு … சீரிஸில் ‘புக்’ மார்க்ஸ் எழுதிக்கொண்டிருக்கிறேனே
ஆமாம்-ல! ஆனா அது போன மாச கோட்டா. இந்த மாசம் முடிஞ்சதுக்கு, இந்த மாசம் புதுசா ஏதாவது ஆரம்பிக்கணும்-ன்னு புது சட்டம் சதானந்த கௌடா போட்டிருக்காராம். 🙂
idea மணி: நித்தி பற்றி புத்தகம்/தொடர் எழுதவும்.
“‘சின்னஞ்சிறு இடையைக் கொண்ட அன்னையே” – இடை பற்றிய வருணிப்பு அந்தச் சூழலில் அவசியம்தானா? பொருத்தமாக இல்லையே.
நீர் என்ன குஷ்பு யக்கா வீட்டுக்குப் பக்கத்து வீடா?:)
எப்பமே வெவகாரமான கேள்வியாவே கேப்பீரே:))
இராமனாதன்…
கம்பன் மட்டுமல்ல, சங்க இலக்கியம் தொட்டு, அபிராமி பட்டர் வரை இது உண்டு!
சீதை = கடவுளாகத் தெரிவதால் சிலருக்கு இப்படி உறுத்தலாம்!
ஆனால் காவியத்தில் அவள் = மனிதப் பெண்ணே! மானுடத்தில் வாழ்ந்து காட்ட வந்தவள்!
இன்னிக்கி “நாற்றம்” ன்னா மூக்கை மூடிப்போம்!
ஆனால் நாற்றம் = நுறு/துர் என்ற இரண்டு மணமாகவும் இருக்கலாம், பழந் தமிழ் வழக்கில்!
அதே போல், இடை-முலை என்று வர்ணிப்பது = கூச்சமற்ற ஒன்றே, அந்தக் கால நிலையில்!
ஏன் உங்க விரல் மடங்கி இருக்கு ன்னு சாதாரணமாக் கேட்போம்-ல்ல? அதே போல் முலை-இடை பற்றிப் பேச முடிந்துள்ளது அக்காலத்தில்!
இன்றும் கிராமத்தில் இரண்டு பெண்கள் உரையாடிக் கொள்வார்கள்; ஆனால் பட்டணத்தில் அப்படியல்ல:)
——————
அனுமனுக்கு, சீதை = தாய் போல!
தாயின் இடையில் குழந்தை ஏறக் கூச்சப்படுமா?
அனுமன், சீதையின் இடையை = குலுக்கும் இடை, என்னைக் கொல்லும் இடை ன்னு பாடுறானா? இல்லை-ல்ல?:) அப்பறம் என்ன??:)
ஒன்றை நினைவில் வையுங்கள்
சீதை, அப்போது தான் தற்கொலைக்கு முயன்றவள்!
அதனால், இதற்கு முந்தைய பாடல்களிலும், அனுமன், அவள் மேனி, தீங்கில்லாமல் நலமாக உள்ளதா? என்று Check செய்வான்!
இங்கே “சுருங்கு-இடை” = மயக்கும் இடை அல்ல!
ஒரு பழம் சுருங்கிப் போனா எப்படி இருக்கும்?
அப்படி வாடி வதங்கி காணப்படுவதால் = சுருங்கு இடை என்று பேசுகிறான்! அவ்வளவே!
இலக்கியங்களில் ஊற ஊற, “இந்தப் பார்வை” உங்களுக்குப் பிடிபடும்:)
தூண்டும் கேள்விக்கு நன்றி!:))
அவள் கணவனைப் பிரிந்தத் துயரில் துரும்பாக இளைத்துளாள். அதனால் இடை மெலிந்து காணப்படுகிறது. அது அனுமன் கண்ணில் striking ஆகப் பட்டு அந்த வர்ணிப்பு வந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன் 🙂
amas32
அனுமன் சீதையைக் காண்பது இதுவே முதன்முறை என்னும்போது, எவ்வாறு அவரது இடை முன்னைக்காட்டிலும் மெலிந்துவிட்டதாக ஒப்பீடு செய்ய முடியும்?
பார்த்தவுடனேயே இடையை நோக்கிய அனுமன் எனக்கு குஷி படத்தை நினைவூட்டுகிறார். 🙂
ண்ணே – இதுக்குப் பதிலு இருக்கு; சொல்லணுமா? ன்னு யோசிக்கிறேன்:)
சொல்லுங்கண்ணே சொல்லுங்க
சுப.இராமநாதன்
Ram_SP@hotmail.com
பாடல்களில் பேசப்படுவோரை வர்ணிப்பது ஒரு மரபு. கவிதையாகப் பாடும்போது அதில் எதார்த்தம் பார்க்கக்கூடாது 🙂
இராமனாதன்…
கம்பன் மட்டுமல்ல, சங்க இலக்கியம் தொட்டு, அபிராமி பட்டர் வரை இது உண்டு!
சீதை = கடவுளாகத் தெரிவதால் சிலருக்கு இப்படி உறுத்தலாம்!
ஆனால் காவியத்தில் அவள் = மனிதப் பெண்ணே! மானுடத்தில் வாழ்ந்து காட்ட வந்தவள்!
இன்னிக்கி “நாற்றம்” ன்னா மூக்கை மூடிப்போம்!
ஆனால் நாற்றம் = நுறு/துர் என்ற இரண்டு மணமாகவும் இருக்கலாம், பழந் தமிழ் வழக்கில்!
அதே போல், இடை-முலை என்று வர்ணிப்பது = கூச்சமற்ற ஒன்றே, அந்தக் கால நிலையில்!
ஏன் உங்க விரல் மடங்கி இருக்கு ன்னு சாதாரணமாக் கேட்போம்-ல்ல? அதே போல் முலை-இடை பற்றிப் பேச முடிந்துள்ளது அக்காலத்தில்!
இன்றும் கிராமத்தில் இரண்டு பெண்கள் உரையாடிக் கொள்வார்கள்; ஆனால் பட்டணத்தில் அப்படியல்ல:)
——————
அனுமனுக்கு, சீதை = தாய் போல!
தாயின் இடையில் குழந்தை ஏறக் கூச்சப்படுமா?
அனுமன், சீதையின் இடையை = குலுக்கும் இடை, என்னைக் கொல்லும் இடை ன்னு பாடுறானா? இல்லை-ல்ல?:) அப்பறம் என்ன??:)
ஒன்றை நினைவில் வையுங்கள்
சீதை, அப்போது தான் தற்கொலைக்கு முயன்றவள்!
அதனால், இதற்கு முந்தைய பாடல்களிலும், அனுமன், அவள் மேனி, தீங்கில்லாமல் நலமாக உள்ளதா? என்று Check செய்வான்!
இங்கே “சுருங்கு-இடை” = மயக்கும் இடை அல்ல!
ஒரு பழம் சுருங்கிப் போனா எப்படி இருக்கும்?
அப்படி வாடி வதங்கி காணப்படுவதால் = சுருங்கு இடை என்று பேசுகிறான்! அவ்வளவே!
இலக்கியங்களில் ஊற ஊற, “இந்தப் பார்வை” உங்களுக்குப் பிடிபடும்:)
தூண்டும் கேள்விக்கு நன்றி!:))
விளக்கத்துக்கு மிக்க நன்றி, கண்ணபிரான். இது மாதிரி எக்கு-தப்பாவே கேள்வி கேட்பது எனது தொழில் தர்மம், மற்றவர் பயன்பெறும் பொருட்டு. (நான் ஒரு தரக்கட்டுப்பாடு, தரசோதனை நிபுணன்) 🙂
இந்த பாடலை படித்தவுடன் எனக்கும் ”சுருங்கு இடை!” என்று சொல்லும் இடத்தில் ஒரு நெருடல் ஏற்பட்டது. கண்ணபிரான் சொன்னது போல் அவளின் மெலிந்து வாடிய தோற்றத்தை கண்டே “பரிதாப” உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே அவ்வாறு அனுமன் கூறுவதாக கம்பன் கூறினான் என கொள்ள தக்கதே.
நல்ல பணி. வாழ்த்துக்கள்.நடுவினில் உங்கள் பாவினை தொடர முடியவில்லை.இப்பொழுதான் சில நாட்களாக படித்தேன்.உங்களது விளக்கங்களும்,துக்கடாவும் அருமை.அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்திருந்த திரு.கண்ணபிரான் ரவிஷங்கர் அவர்களின் விளக்கங்களும் அருமை அருமை..அடுத்த தொடக்கத்திலும் நல்ல தமிழ் விருந்தை ஏற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.குறைந்தபட்சமாக ‘சுந்தர காண்டமாவது’ எதிர் பார்க்கிறோம்.
நன்றி-ங்க, முயற்சி செய்யறேன்
சங்க இலக்கியப் பாடல்கள் மட்டுமல்லாமல், தேவாரம், நாலாயிர திவ்யபிரபந்தம், கம்பன், கந்தர் அலங்காரம் என்று ஒரு வருடம் ஒவ்வொரு நாளும் இன் சுவை தந்தது. 365 பாடல்களோடு நிற்க பெறுவது வருத்தமே! வருடம் முலுவதுக்குமான இது மாபெரும் முயற்சி, வாழ்த்துக்கள். நன்றி!
kryes, இராகவன் என்று பலரும் பாடல்களுக்கு அருமையான விளக்கங்களை தந்திருக்கிறார்கள். பாடல்களுக்கு காணொளி, படங்கள், பாடல்கள் என்று ஒவ்வொன்றும் சிறப்பானவை. அவைகளை அப்படியே விட்டு விட மனசு ஒப்பவில்லை. இணையம் கடல் போன்றது, இந்த முத்துக்கள் காணாமல் போய் விடக் கூடும்.
365 பாடல்களில் சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து ஒரு மின்-நூல் தயார் செய்யலாம். இணையம் கூட்டு முயற்சிக் கேற்றது, எதாவது செய்யுங்கள், தமிழ்ப் படிக்க இல்லாமல் இனி வரும் தினங்கள் சுவாரசியம் அற்று போகும்.
நன்றி. முயற்சி செய்கிறேன்
மிக்க நன்றி சொக்கரே!! நானும் தினம் ஒரு பாடல் என்று பல வருடங்கள் தொடரும் என்றே எண்ணியிருந்தேன், ௩௬௫ நாளில் முடித்துவிட்டது ஏமாற்றமே… தயவுசெய்து மேலும் தொடரவும்…
அனானி முருகன் அண்ணன் கண்ணன் அவர்களுக்கும், பின்னூட்டத்தில் விளக்கங்கள் அளித்த அனைவருக்கும் நன்றி!!
நன்றி கார்த்திக், முயற்சி செய்கிறேன்
‘தினம் ஒரு பா’வில் பெரும் தொண்டாற்றிய சொக்கன் மற்றும் கண்ணபிரானுக்கு வாழ்த்துக்கள்+நன்றிகள். இந்த வலைப்பதிவால் பயனடையும் பலரில் நானும் ஒருவன்.
நன்றி
சொக்கரே,
365 நாட்கள் தவறாமல் தமிழ் தந்து எனது நாட்களைச் சிறப்பித்தமைக்கு நன்றி!
தினமும் தமிழ்ப்பால் சுவைக்காமல் வேலையே ஓடுவதில்லை!
KRS, ராகவன், amas32, கந்தசாமி என்று முகந்தெரியா நண்பர்கள் பலரை இங்கே கண்டெடுத்தேன்!
ஒரு இரயில் பயணம் முடிவுக்கு வந்தது போன்ற பிரமை!
ஆயினும், தமிழ்ப் பயணம் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம்!
365பா இணையத் தளம் மூடப்பட்டு விடக் கூடாது; காலப்போக்கில்,
1000பா வாக உருவெடுக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்!
உங்கள் பலவிதமான தமிழ்ப் பணிகளும் தொடர வாழ்த்துக்கள்!
(Note to self: இனிமேலாவது ஆபீஸ் நேரத்தில் ஒழுங்கா வேலையைச் செய்யணும்..)
நன்றி ஆனந்தன், அவசியம் முயற்சி செய்கிறேன்
Thank u Mr. Chokkan .. U hav done a great job .. pls continue .. Also thanks to those who hav supported Mr. Chokkan, by giving their comments & suggestions .. Eagerly Waiting to see u in another set of works soon ..
Thanks Banu Venkat
சொக்கரே,
நீங்கள் வாசகர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்கி ‘தினம் ஒரு பா’வைத் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.
‘தினம் ஒரு பா’ ஒரு மிகப் பெரிய பொறுப்பு, அதைச் செய்யத் தேவையான நேரம் கிடைப்பது அரிது என்பதையும் அறிவோம். உங்களின் சுமையைக் குறைக்க எவ்வகையிலேனும் வாசகர்களாகிய நாங்கள் உதவமுடிந்தால் கூறவும்.
ஆனால், இச்சேவையை விடாது தொடர முயற்சிக்கவும். தயவுசெய்து.
நன்றி
நன்றி ஐயா, முயற்சி செய்கிறேன்
கால்கள் வெறும் கருவியே, இராமபிரானின் அருளால் தான் கடலைத் தாண்டி வர முடிந்தது என்றே அனுமன் கூறுவதாகக் கொள்ளலாம்.
அனுமன் இந்திய எல்லையில் இருந்து கிளம்பும் பொழுது ஒரு மலையின் மேல் கால் வைத்து உந்தி ஒரே தாவாகக் கடலைத் தாவி இலங்கைக் கரையில் வந்து குதிக்கிறார்.
அதனாலும் அவர் அப்படிக் குறிப்பிட்டதாகக் கொள்ளலாம். 🙂
சீதையின் ஆச்சர்யத்தைப் பார்க்கும் பொழுது அவளின் குழந்தைத்தனம் தான் மேலோங்கித் தெரிகிறது. எப்படி பெருங்கடலைத் தாண்டி வந்தாய் என்று அனுமனைப் பார்த்துக் கேட்கிறாள். அப்படிப் பட்ட குழந்தை உள்ளம் கொண்ட இளமங்கை அரக்கியர்கள் நடுவில் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாள் என்பதைச் இதிலிருந்து சிறிதளவாவது நாம் உணரலாம்.
எப்பொழுதும் மனைவிகளுக்கு உன் கணவன் இதைச் செய்தான், உன் கணவனால் தான் இந்தக் காரியம் வெற்றிப் பெற்றது என்று சொன்னாலே உச்சிக் குளிர்ந்துவிடும். கணவனை இனியொரு முறை பார்ப்போமா என்ற நிலையில் இருந்த சீதா தேவிக்கு, இராமனின் தூதுவன், உன் கணவனின் அருளால் தான் கடலைத் தாண்ட முடிந்தது என்ற சொன்ன சொற்கள் அவளுடைய காதுகளில் தேன் போல பாய்ந்திருக்கும்.
amas32
A Quik Update on the Quiz:
#Ppl who have tried = 35
100% = 5
90% = 8
80% = 4
70% = 3
60% = 3
Others = 12
Still some ppl are “In Progress” State; Will wait till Fri Noon, before closeout
————————–
100% வந்த “முதல் மூவருக்கு”ப் பரிசாக எண்ணியிருப்பது இதுவே:
வென்றவர் பெயரில்,
சென்னை, வள்ளுவர் குருகுலம்… சிறார்களுக்குத் தமிழ்க்-கதைப் புத்தகங்கள்! (3 sets)
இது Ok-vaa? Ok illiyaa? Lemme know:)
Okay Okay :-)) If you need any help giving the gifts to them feel free to ask me 🙂
amas32
//OK வா?// என்பது தவறு. “OK, நீ வருகிறாயா” என்பதுபோல் இருக்கிறது.
“OK யா?” என்றுதான் இருக்கவேண்டும் (என்று தொல்காப்பியர் சொல்லாமல் விட்டிருக்கமாட்டார்..)
தேங்காவா, மாங்காவா என்று கேட்பதில்லையே?
(எதோ இப்படிக் கேட்டாவது 365பாவத் தொடரலாம் என்றொரு நப்பாசைதான்..)
:)))
What sort of tricks? Chokkan Munivar will not yield to Menaka:))
இன்ஷா அல்லா, அவர் தான் சொல்லியுள்ளாரே, பிறிதொரு வடிவத்தில் சந்திப்போம்-ன்னு:) நம்புங்கள் சொக்கனை:)
—————–
மணி+ஓசை = மணி+ய்+ஓசை = மணியோசை
அக+ஓசை = அக+வ்+ஓசை = அகவோசை
1) உயிர்-உயிர் சேரும் போது, நடுவில் வருவது = உடம்படு மெய்
2) ending letter of 1st word (நிலைமொழி) = இ, ஈ, ஐ வந்தால், ய is the joiner
3) for other letters = வ is the joiner
4) for ஏ = both ய & வ can be joiners
நான் மோசமான பையன் போல, என்னைக்குத் தான் இப்படி ஆங்கிலத்தில் நடுநடுவே விளக்கஞ் சொல்வதை விடப் போறேனோ! முருகா!:)
இ, ஈ, ஐ வழி யவ்வும்
ஏனை உயிர் வழி வவ்வும்
ஏ முன் இவ்விரு மையும்
—————–
இப்போ சொல்லுங்க: ஓக்கேவா, ஓக்கேயா? = எது சரி?? :))))
= ஏ முன் இவ்விருமையும்!:)
சிவா…
சும்மா விளையாண்டேன்…
பிற மொழியைத் தமிழ் எழுத்தில் எழுதும் போது, பல விதிகள் பொருந்தாது! ஓக்கேவா, ஓக்கேயா என்பதெல்லாம் விளையாட்டு தான்!:)
நியாயாமா, ஓக்கேவா ன்னு நான் எழுதியதே தப்பு: “சரியா” ன்னு எழுதுவதே சரி!!
நம்மில் பலர், அயலோசைகளைத் தமிழில் எழுதி விட்டு, அதற்கு தமிழ் வளைந்து கொடுக்க வேணும் ன்னு நினைக்கிறோம்!
= அந்த அளவுக்குத் தான் இருக்கு நம்ம மனசாட்சி! :(((
இஷ்டம் = விருப்பம் என்று எழுதுவதே சரி!
ஆனா தவிர்க்க முடியாத இடங்களில், இட்டம் ன்னு எழுதலாம்! இதுவே தொல்காப்பியர் குடுக்கும் விலக்கு (Concession)
ஆனா, நாம ஆதியை மறந்துவிட்டு,
மீதிக்கு அடித்துக் கொள்கிறோம்:)
இட்டம் ன்னு எழுதற படுபாவி டுமீலனுங்க ஒரு கூட்டம் ஏசும்!
எழுத்தைக் கள்ளில் தோய்ச்சி எழுது ன்னு, ஆங்காங்கே வெட்டி, ஒரு கூட்டம் அல்ப விளையாட்டு செய்யும்!
இந்தக் கும்மியில் இஷ்டம் = விருப்பம் என்பதையே மறந்து போய்விட்டு, இஷ்ட-இட்ட சண்டை மட்டுமே மிஞ்சும்! அதான் வேதனை:(
சரி சரி… மனசாட்சியெல்லாம் யாரு பாக்குறா இங்கே?:)
எனக்குப் பிடித்தம்-ன்னா தமிழ் வளைஞ்சித் தான் குடுக்கணும்! = அதுவே தொல்காப்பிய விதி:))
சேதிக்கு வருவோம்!
உங்களுக்கு ஒரு கேள்வி! (தோடா, நானே பதில் சொல்லிக்கிட்டு இருந்தா எப்பிடி? எனக்கும் கேள்வி கேக்க ரொம்ம்ம்ம்ப ஆசை:)
————
மா + இலை
= மாயிலையா? மாவிலையா? 🙂
= விதிப்படி, மாவிலை தானே? (ஏனை உயிர் வழி வ-வ்வும்)
ஆனா வள்ளுவர், “மாயிரு ஞாலம்” ன்னு எழுதறாரு!
= வள்ளுவரே தொல்காப்பியத்தை மதிக்கலை ன்னு சொல்லீறலாமா?:)
= இல்ல, படியெடுக்கும் போது நடந்து தப்பு-ன்னு வழக்கம் போல சதாய்ச்சிறலாமா?
= என்ன பண்ணலாம் சொல்லுங்க?:)
இப்படி உங்களிடம் இன்னும் கொஞ்சம் இலக்கணப்பால் க்றக்கலாம் என்றுதான் தூண்டில் போட்டேன். மாட்டிக்கொண்டீர்!
//விதிப்படி, மாவிலை தானே? (ஏனை உயிர் வழி வ-வ்வும்)
ஆனா வள்ளுவர், “மாயிரு ஞாலம்” ன்னு எழுதறாரு?//
அதான் எனக்குத் தெரியுமே-
‘‘மாயிரு ஞாலம்’’ என உரிச்சொல் ஆகார வீற்றின்
வழி யகரவுடம்படுமெய் வந்த தென்னையெனின், அஃது ‘‘இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்’’ என்னுஞ் சூத்திரத்தான் அமையுமென்க. இது புறனடை.
Simples..! இதெல்லாம் ஒரு கேள்வியா?
உள்ளதைச் சொல்லிவிடுகிறேன்!
எல்லாம் TAMILVU.ORG தரும் வரம்! வாழ்க TAMILVU.
நீங்களே உங்கள் ஸ்டைலில் விளக்கினால் தான் சிறப்பாக இருக்கும்.
உங்களுக்குப் பிடித்தமான ‘கள்’ளைப் பற்றியும் விளக்கம் உள்ளது!
http://www.tamilvu.org/courses/degree/c021/c0214/html/c0214333.htm
ha ha ha! happy to see ppl checking in tamilvu library instead of assuming themselves! நூலகம் ஓர் உற்ற தோழன்!
———–
அதே!
* மா+இலை = மாவிலை (மா= மாமரம்= பெயர்ச்சொல்)
* மா+இரு+ஞாலம் = மாயிரு ஞாலம் (மா= உரிச்சொல்= பெரிய என்னும் பொருளில்)
ஆனா, இணைய “அறிஞ்சர்கள்” பலர்… சும்மா ஒரு Comparisonஐ மட்டும் வைத்துக் கொண்டு, குதிப்பதே, இப்பல்லாம் வழக்கம் ஆகிப் போயிருச்சி!:)
Can=Cans ன்னா, Man=Mans என்பது போல:)
அதற்குத் தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன்! = மாவிலை, மாயிரு!
சொற்கள் ஒன்று போல் பிறப்பதில்லை!
மொழியியல், தொல்காப்பிய நூற்பாக்களைப் பார்க்காமலேயே, நாமாக ஒன்றைப் பிடித்துக் கொண்டு, சாதிப்பதே வழக்கம் ஆகிருச்சி! இழப்பு மொழியியலுக்குத் தான்!:(
———–
நீங்கள் தந்த சுட்டியைப் பார்த்தேன் சிவா; அவரும் அதே பிழையைத் தான் செய்கிறார்!
நூற்பா ஆதாரம் காட்டாமல், அவரவர் மனம் போன போக்கில் சொல்வதும் கொள்வதும் தரவாகாது!
மொழியியலுக்கு = தொல்காப்பியர், நச்சினார்க்கினியர் சொல்வதே தரவு!
= http://madhavipanthal.blogspot.com/2012/06/blog-post.html
கடந்த 365 நாளும் , தினம் ஒரு பா அருளிய சொக்கன் அய்யா அவர்களுக்கு நன்றி.
பின்னூட்டம் இட்டு விளக்கிய அனைவருக்கும் நன்றி
இனிமேல் தினம் ஒரு பாவில் புதிய “பா” வராது என்று நினைத்தால் மிக வருத்தமாகத்தான் இருக்கிறது .
சொக்கன் அய்யா அவர்களே, “முத்தொள்ளாயிரம் ” போல இதனையும் நீங்க புத்தக வடிவில் வெளிவிடுவீர்களா ? அன்பு வேண்டுகோள் ..
சுரேஷ்
‘ஒருவன் – ஒப்பற்றவன்’…..
சுட்டு – http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81070&padhi=07&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
தயவு செய்து சீக்கிரமே தொடர வேண்டும் …. இது ஒரு ஒப்பில்லா பணி… தமிழுக்கு
Dear Chokkan
சிறந்த, நிறைவான பணிக்கு வாழ்த்துகள். மேலும் தொடரவும்
ச.சங்கர்
நண்பர்களுக்கு வணக்கம்!
இதோ போட்டி முடிவுகள்!:))
சற்று நேரமாகி விட்டது; மன்னிக்க!
Total Takers=46
முதல்பரிசு= Ramachandran BK
இரண்டாம்= SreeGuruparan
மூன்றாம்= Rameshforu (@hsemar)
மூவருமே 100% – இனிய வாழ்த்துக்கள்!:)
இவர்களைத் தவிர 100% வாங்கியவர்களும் உண்டு!:) ஆனால் இந்த மூவரே உலகை முதலில் சுற்றி வந்தவர்கள்! அதனால் பழம் = இவர்களுக்கே!:))
————————
Other 100% folks
@dagalti & @tmt_selvam – உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!:)
Few Stats…
#Total Takers = 46
100% = 5
90% = 10
80% = 5
All others >= 50% except two! = That shows the skill of 365paa Readers:)
தமிழ் விரும்பும் 365பா வாசகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் + வணக்கம்!
——————–
இதே எம் தோழி பரிசு-ஏலோ ரெம்பாவாய்:)
Ramachandran BK, SreeGuruparan, Rameshforu சார்பாக,
சென்னையில் உள்ள குழந்தைகள் காப்பகப் பள்ளிக்கு = மூன்று புத்தக வரிசைகள் (Amar Chitra Katha) – 10 books each!
* The Best of Indian Wit and Wisdom – தெனாலிராமன், பீர்பால், பஞ்சதந்திரம்
* Timeless Ten – காவியச் சுருக்கம்
* Indian Leaders – அம்பேத்கர், நேரு, பாரதியார், திலகர்…
வாழ்த்துக்கள்! பரிசு ஓக்கே தானே?:)
அனைத்து விடைகளும், விளக்கங்களும் இங்கே = http://goo.gl/dhOi6 (pdf)
————–
சென்னையில், இப்புத்தகங்களைக் குழந்தைகள் இல்ல நூலகத்தில் சேர்த்துவிட,
இன்னொரு பிரபலமான #365paa வாசகர் = @amas32 அம்மா அவர்கள் முன்வந்துள்ளார்கள்! நன்றிம்மா!:)
– இப்படியான #365paa கூட்டு முயற்சியில்,
– தமிழும் அன்பும் என்றும் தழைக்க,
– காதல் முருகனை வேண்டி விடைபெற்றுக் கொள்கிறேன்!
நன்றி சொக்கரே, நன்றி வாசகர்காள்!:))
நடுவில் சில நாள் ஆஃபீஸ் விஷயமாக வெளியூர் சென்று விட்டதால் கடைசியில் மொத்தமாக படிக்க வேண்டி வந்தது. அதனால் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது ஏமாற்றமே. எனினும் தமிழ்த் தேனை 365 நாள் சுவைத்தேன். நன்றி.
தேர்த்திருவிழா. தேருக்கு நன்றி. சக்கரங்களுக்கு நன்றி. வடங்களுக்கு நன்றி. கண்ட கண்களுக்கும் கொண்ட நெஞ்சங்களுக்கும் நன்றி பல.
திட்டப்படுத்துதல் என்று சொல்வார்கள். அதாவது இப்படிச் செய்தாலென்ன என்று ஒரு செயலை நினைத்து திட்டமிட்டு செயல்படுத்துதல்.
இலக்கிய நூல்களை ஆங்காங்கு எத்தனையோ பேர் தேடிப்பிடித்து படிக்கிறார்கள். ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கைக் கொண்டு வந்து முறைப்படுத்திப் பதிவிட்டு பலர் கூடி வடமும் இழுக்கச் செய்த நண்பர் நாகாவிற்கு எனது வணக்கங்கள்.
என்னையும் வடம் பிடிக்க வைத்ததற்கு அவருக்கு என்னுடைய நன்றிகள்.
இந்த 365பா பெற்ற வெற்றி சிறப்பானது. பலரையும் தொடர்ந்து படிக்கச் செய்து பங்களிக்கச் செய்தது. இது நாமெல்லாம் பெருமைப்படத் தக்கது.
இது போன்று இன்னும் சிறந்த படைப்புகளை நண்பர் நாகா அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இனிமேல்தான் எனக்கு வேலை. முன்பு நான் படிக்காத பாக்களையெல்லாம் படித்துச் சுவைக்கப் போகிறேன். 🙂 மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. 🙂
வாழ்த்துகள்..நல்லதொரு திட்டப்பணி.
புத்தகமாகப் போடும் போது கமெண்டுகளையும் போடுங்கள்…it will be interesting
I could not believe myself that the session is completed. But I have enjoyed your complete postings. I will request you to continue this so that people like us can feel the proud to be Tamilan. Thank you very much for your effort. Please continue if you can and the lord god permits.
இவ்வளவு நாள் எப்படி இந்தப் பதிவு கண்களில் சிக்காமல் போனது என்பது எனக்கு வியப்பு !
|| இன்ஷா அல்லா, ||
அல்லாவின் ஆசி கிடைத்தவுடன் மீண்டும் துவக்கி விடுவீர்களா?
🙂
இதை ஒரு தொடர் முயற்சியாக நான் தொடக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் .
:))
வணக்கம்…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_4.html) சென்று பார்க்கவும்… நன்றி…